For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கல்லூரி மாணவனின் வங்கிக் கணக்கில் திடீரென வந்து விழுந்த ரூ.46 கோடி..!! உடனே என்ன செய்தார் தெரியுமா..?

02:57 PM Mar 30, 2024 IST | Chella
கல்லூரி மாணவனின் வங்கிக் கணக்கில் திடீரென வந்து விழுந்த ரூ 46 கோடி     உடனே என்ன செய்தார் தெரியுமா
Advertisement

கல்லூரி மாணவரின் பான் எண்ணை தவறாக பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கில் ரூ.46 கோடி பரிவர்த்தனை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மத்தியப் பிரதேசம், குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரமோத் குமார் தண்டோடியா. இவருடைய PAN Number மூலம் மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடைய வங்கிக்கணக்கில் ரூ.46 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்று பிரமோத் குமாருக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது தொடர்பாக வருமான வரித் துறை தொடர்புடைய அலுவலர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது தான் பிரமோத் குமாரின் பான் எண், மேற்கூறியுள்ள நிறுவனத்தின் பான் எண்ணாக சேர்க்கப்பட்டு பணப் பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர், இதுகுறித்து புகார் அளிக்க பிரேம் குமார் முயன்றுள்ளார். ஆனால், அவரது புகாரை ஏற்காமல் உள்ளூர் காவல் துறையினர் அலைக்கழித்துள்ளனர்.

இதனால், நேற்று குவாலியர் கூடுதல் பொலிஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஏஎஸ்பி கூறுகையில், "கல்லூரி மாணவர் வங்கிக் கணக்கில் முறைகேடாக ரூ.46 கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக புகார் வந்தது. அதை ஆய்வு செய்ததில் ஒரு நிறுவனம் இவரது பான் எண்ணை தவறாக பயன்படுத்தி பணப்பரிவர்ததனை செய்துள்ளது. நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

Read More : தங்கர் பச்சானுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!! திடீரென மோதிக்கொண்ட பாஜக – பாமக தொண்டர்கள்..!!

Advertisement