14 பேர் அதிரடி கைது... குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள்...!
600 கோடி ரூபாய் மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளை இந்திய கடலோர காவல்படையினர் குஜராத் கடற்கரையில் பாகிஸ்தான் படகில் இருந்து கைப்பற்றியதாக கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 14 பேரை கைது செய்துள்ளனர்.
இந்திய கடலோர காவல்படை இன்று, பாகிஸ்தான் படகில் இருந்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியதாகவும், குஜராத் கடற்கரையில் கப்பலில் இருந்த 14 பேரைக் கைது செய்ததாகவும் தெரிவித்தனர். கடல்சார் பாதுகாப்பு நிறுவனம், அதிகாரப்பூர்வ அறிவிப்பில், குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் அரபிக்கடலில் தீவிர சோதனையானது மேற்கொள்ளப்பட்டது..
ஒரே இரவில், இந்திய கடலோர காவல்படையினர் உளவுத்துறை அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். பாகிஸ்தான் படகில் இருந்து 14 பணியாளர்களுடன் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 86 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று ஏஜென்சி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் படகில் இருந்து என்ன வகையான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டன என்பதை கடலோர காவல்படை இன்னும் வெளியிடவில்லை.