சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையா..? அண்ணாமலை கேள்வி..!!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையா..? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "சாதிவாரி கணக்கெடுப்புக்காக, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குலசேகரன் தலைமையில் முந்தைய அரசு ஆணையம் அமைத்தது. பிறகு, ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக, ஆணையத்துக்கு 6 மாதம் கூட கால நீட்டிப்பு வழங்கவில்லை. அப்படி வழங்கியிருந்தால் தமிழ்நாட்டிற்கு தற்போது சாதிவாரியான புள்ளி விவரங்கள் இருந்திருக்கும்.
ஏன் அவ்வாறு கால நீட்டிப்பு வழங்கவில்லை என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். இதுமட்டுமின்றி, கடந்த 2011ஆம் ஆண்டு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் உதவியுடன் மாநில அரசுகள் மூலமாக சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்தப் பணிகள் 2013ஆம் ஆண்டு 99.3% முடிவடைந்த போதிலும், கணக்கெடுப்பு விவரங்களை மத்திய காங்கிரஸ் அரசு வெளியிடவில்லை என்பதையும் முதல்வருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More : புதிய தொழில் முனைவோருக்கு சூப்பர் வாய்ப்பு..!! ரூ.5 கோடி வரை கடன்..!! மானியமும் உண்டு..!!