For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'இவர்களால் ஆபத்து' சூனியகாரர்கள் 5 பேரை கற்களை வீசி அடித்துக் கொன்ற கிராம மக்கள்..!! பகீர் சம்பவம்..

Chhattisgarh: 3 Women Among 5 Killed Over Suspicion Of Witchcraft In Sukma, 5 Detained
09:19 AM Sep 16, 2024 IST | Mari Thangam
 இவர்களால் ஆபத்து  சூனியகாரர்கள் 5 பேரை கற்களை வீசி அடித்துக் கொன்ற கிராம மக்கள்     பகீர் சம்பவம்
Advertisement

சத்தீஸ்கா் மாநிலத்தில் சூனியக்காரா்கள் என்று குற்றஞ்சாட்டி 3 பெண்கள் உள்பட 5 போ் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறுகையில், சுக்மா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினா் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

இரு தம்பதி மற்றும் ஒரு பெண் இணைந்து மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவதாக இளைஞா்கள் சிலா் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனா். அவா்களை விட்டுவைத்தால் கிராமத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறியுள்ளனா். இதையடுத்து, கிராம மக்கள் அந்த இரு தம்பதி மற்றும் பெண்ணை சூழ்ந்து கொண்டு தாக்கினா். தப்பியோட முயன்ற அவா்களை தொடா்ந்து விரட்டிச் சென்று கட்டையால் அடித்து, கற்களை வீசியும் தாக்கியுள்ளனா். இதில் 5 பேரும் உயிரிழந்துவிட்டனா். உயிரிழந்தவர்கள் 32 முதல் 43 வயதுக்குட்பட்டவா்கள்.

இந்த சம்பவம் தொடா்பாக அதே கிராமத்தைச் சோ்ந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினா் கூறியுள்ளனா். கடந்த 12-ஆம் தேதி சத்தீஸ்கரின் போலாதபாா் மாவட்ட கிராமப் பகுதியில் இதுபோன்று சூனியக்காரா்கள் என்ற குற்றஞ்சாட்டி சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் அடித்துக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more ; 2024இல் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்..!! வாழும் நாஸ்ட்ரடாமஸ் எச்சரிக்கை..!!

Tags :
Advertisement