முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Breaking: தடம் புரண்ட "சார்மினார் எக்ஸ்பிரஸ்" 50 பயணிகள் படுகாயம்.! விபத்து நடந்தது எப்படி.?

12:22 PM Jan 10, 2024 IST | 1newsnationuser7
Advertisement

சென்னை சென்ட்ரலில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 50 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சார்மினார் எக்ஸ்பிரஸ் நம்பள்ளி ரயில் நிலையம் அருகே விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 5 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு ரயில் நிலையத்தின் தடுப்புச் சுவரின் மோதி விபத்திற்குள்ளானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ரயில் நிலையத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்திருக்கிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
5 coaches Derailed50 injuredCharminar Expresschennai to hyderabadtrain accident
Advertisement
Next Article