For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Bar Accident: சென்னை மதுபான விடுதி மரணம்...! உரிமையாளர் ஜாமினில் விடுவிப்பு...!

09:10 AM Mar 31, 2024 IST | Vignesh
bar accident  சென்னை மதுபான விடுதி மரணம்     உரிமையாளர் ஜாமினில் விடுவிப்பு
Advertisement

மதுபான விடுதி உரிமையாளர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement

சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள மதுபான கேளிக்கை விடுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சைதாப்பேட்டை, எழும்பூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (22 வயது), லில்லி (24 வயது) மற்றும் தமிழகத்தை சேர்ந்த சைக்ளோன் ராஜ் (48 வயது) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த மதுபான விடுதி உரிமையாளர் அசோக் குமார் நேற்று சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவத்தில் ஏற்கனவே மேலாளர் சதீஷ் கைது செய்யப்பட்ட நிலையில், உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை, ஆழ்வார்பேட்டையில் மதுபான விடுதியில் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அபிராமபுரம் காவல்நிலையத்தில் சரணடைந்த மதுபான விடுதி உரிமையாளர் அசோக்குமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு எழுத்து பூர்வ விளக்கங்களை பெற்ற பின் காவல்நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

Advertisement