For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மஞ்சள் அலர்ட்...! அடுத்த 1 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

06:42 AM Apr 12, 2024 IST | Vignesh
மஞ்சள் அலர்ட்     அடுத்த 1 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் நெல்லை, குமரியில் லேசான மழைக்கு வாய்ப்பு. இந்த மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14, 15, 16-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌

Tags :
Advertisement