முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெரும் சோகம்..!! சென்னை பெருவெள்ளம்..!! 5 பேர் பலி..!! காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

07:32 AM Dec 05, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னையில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 2015இல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை விட மிக்ஜாம் புயல் பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சென்னை புறநகர் மட்டுமல்லாது சென்னை மத்திய முக்கிய பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய அரசு சார்பிலும், பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் அமைப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு விலகியதால், மழையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், கனமழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மின்சாரம் தாக்கி லோன் ஸ்கொயர் சாலையில் பத்மநாபன் (50), துரைப்பாக்கத்தில் கணேசன் (70) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். மரம் விழுந்ததில் பெசன்ட் நகரில் முருகன் (35) என்பவர் உயிரிழந்தார். பட்டினம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத ஒருவரும், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய பகுதிகளிலும் அடையாளம் தெரியாத ஒருவரும் சாலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
சென்னை காவல்துறைசென்னை பெருவெள்ளம்மிக்ஜாம் புயல்
Advertisement
Next Article