For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து: 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி…!

04:11 PM May 09, 2024 IST | Kathir
செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து  5 பெண்கள் உட்பட 8 பேர் பலி…
Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தின் காரணமாக பட்டாசு ஆலையின் 7 அறைகள் தரைமட்டமாகியுள்ளன.

Advertisement

இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தனியறை பாட்டாசு ஆளை வெடி விபத்தில் இதுவரை 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி ஆகியுள்ளனர். மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த ஆலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Tags :
Advertisement