For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நமீதாவிடம் இந்து மத சான்றிதழ் கேட்ட விவகாரம்.. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!! - அமைச்சர் சேகர்பாபு

Charities Minister Shekhar Babu told reporters today that appropriate action will be taken regarding the issue of asking actress Namita for a Hindu religious certificate.
11:03 AM Aug 27, 2024 IST | Mari Thangam
நமீதாவிடம் இந்து மத சான்றிதழ் கேட்ட விவகாரம்   உரிய நடவடிக்கை எடுக்கப்படும்       அமைச்சர் சேகர்பாபு
Advertisement

நடிகை நமீதாவிடம் இந்து மத சான்றிதழ் கேட்ட விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Advertisement

தமிழகத்தில் உலகப்புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, நடிகை நமீதா தனது கணவருடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த கோயில் அதிகாரி ஒருவர், நடிகை நமீதாவை தடுத்து நிறுத்தி, “நீங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவரா... அதற்கான சான்றிதழ் எதுவும் உள்ளதா?” என கேட்டுள்ளார். அதற்கு நமீதாவும் அவரது கணவரும் தாங்கள் பிறப்பிலேயே இந்து தான் எனவும், நாடு முழுவதிலும் பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்து நடிகை நமீதா வீடியோ பதிவிட்டிருந்தார்.

நமீதாவிடம் ‘இந்து’ மத சர்டிபிகேட் கேட்ட விவகாரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரி மேற்குறிப்பிட்டவாறு நடந்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் குறித்து இன்று சென்னையில் நடைபெற்ற ஓர் செய்தியாளர் சந்திப்பில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், “நடிகை நமீதா கூறிய புகாரில் என்னையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க அறநிலையத்துறை  ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்கள் மனம் புண்படியாகவோ, சட்ட விரோதமாகவோ ஏதேனும் நடந்து இருந்தது கண்டறியப்பட்டால் உடனடியாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வருத்தப்பட வேண்டாம். அவர்கள் வருந்தி இருந்தால் எங்கள் வருத்தத்தை நாங்கள் பதிவு செய்து கொள்கிறோம். ” என நமீதாவிடம் ‘இந்து’ மத சர்டிபிகேட் கேட்ட விவகாரம் குறித்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

Read more ; நடைமேடைக்கும், ரயிலுக்கு இடையே சிக்கிய ரயில்வே அதிகாரி..!! – திருச்சியில் பரபரப்பு

Tags :
Advertisement