அரையாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம்..!! வெளியானது புதிய அறிவிப்பு..!!
07:55 AM Dec 20, 2023 IST | 1newsnationuser6
Advertisement
அரையாண்டு தேர்வு நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. அதன்படி, இந்த 4 மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளிலும், இவற்றை ஒட்டியுள்ள ஊர்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது.
இந்நிலையில், தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அட்டவணைப்படி 18.12.2023 அன்று நடைபெறாத தேர்வானது, 2024 ஜனவரி 2ஆம் தேதியன்று நடைபெறும் என தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா அறிவித்துள்ளார்.