முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குட் நியூஸ்...! இனி இவர்களுக்கும் ரீஃபண்ட் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்...! மத்திய அரசு அறிவிப்பு

CBIC initiates electronic disbursal of duty drawback amount directly to exporter’s bank accounts through PFMS
05:35 AM Jun 06, 2024 IST | Vignesh
Advertisement

ஏற்றுமதியாளர்களுக்கான ரீஃபண்ட் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையை மத்திய நேர்முக வரிகள் வாரியம் தொடங்கியது.

Advertisement

ஏற்றுமதியாளர்களுக்கான ரீஃபண்ட் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையை மத்திய நேர்முக வரிகள் வாரியம் தொடங்கியது. பொது நிதி நிர்வாக முறை (பிஎஃப்எம்எஸ்) மூலம் வங்கிக் கணக்கில் செலுத்தும் இந்த நடைமுறை காகிதம் இல்லாத சுங்கம் மற்றும் வர்த்தக வசதியின் மற்றொரு முன்முயற்சியாகும். இந்தப் புதிய நடைமுறை மனிதர்கள் தலையீட்டை அகற்றி வெளிப்படைத்தன்மையை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் வணிகத்தை எளிதாக்கும் நடைமுறையின் மேம்பாட்டு முயற்சிகளை மத்திய நேர்முக வரிகள் வாரியம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. வர்த்தக வசதி ஒப்பந்தத்தின் கூடுதல் அணுகுமுறைகளை பின்பற்றி புதிய வர்த்தக வசதிகளை மேற்கொள்வதை இந்த வாரியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுங்கச் சட்டம், 1962 இன் பிரிவு 75 இன் கீழ் வரிக் குறைபாடு, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அல்லது ஏற்றுமதிப் பொருட்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் எக்சிசிபிள் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை தள்ளுபடி செய்கிறது.

Tags :
Bank transfercentral govtexportTax
Advertisement
Next Article