For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'EPS' தரப்புக்கு மீண்டும் ஒரு வெற்றி..!! அதிமுக வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

03:50 PM Feb 06, 2024 IST | 1newsnationuser7
 eps  தரப்புக்கு மீண்டும் ஒரு வெற்றி     அதிமுக வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Advertisement

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை மேலும் புதிய நிர்வாகிகளின் நியமனத்தை தடை செய்ய வேண்டும் எனக் கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார் . இந்த வழக்கு தொடர்பாக பதிலளித்த தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. மேலும் அதிமுக கட்சியின் லெட்டர் பேடு மற்றும் சின்னம் பயன்படுத்துவது தொடர்பாக ஓபிஎஸ் உரிமை கோரிய வழக்கிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement