For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடிகை பார்வதி நாயர் மீது பாய்ந்தது வழக்கு..!! அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா..? கோர்ட் அதிரடி உத்தரவு..!!

Thenampet police have registered a case against actress Parvathy Nair.
09:52 AM Sep 21, 2024 IST | Chella
நடிகை பார்வதி நாயர் மீது பாய்ந்தது வழக்கு     அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா    கோர்ட் அதிரடி உத்தரவு
Advertisement

நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர், அஜித்துடன் சேர்ந்து என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில், தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு நடிகை பார்வதி நாயர் தன்னுடைய வீட்டில் முன்னாள் ஊழியர் சுபாஷ் திருடியதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சுபாஷ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சுபாஷ் பார்வதி நாயர் மற்றும் அவருடைய நண்பர்கள் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.

இதுதொடர்பாக தேனாம்பேட்டை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு செய்ய அதிரடியாக உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் தற்போது பார்வதி நாயர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

Read More : ’மார்பகங்களை துணிச்சலாக காட்டிய நடிகை’..!! ’மத்திய அமைச்சரின் வீட்டிற்கு போனதே அதுக்காகத்தான்’..!! மீனா குறித்து வெளியான பகீர் தகவல்..!!

Tags :
Advertisement