For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது - கர்நாடக பாடகிகள் கடும் எதிர்ப்பு

01:59 PM Mar 22, 2024 IST | 1newsnationuser5
கர்நாடக இசைக் கலைஞர் டி எம்  கிருஷ்ணாவுக்கு  விருது   கர்நாடக பாடகிகள் கடும் எதிர்ப்பு
Advertisement

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதற்கு கர்நாடக பாடகிகள் ரஞ்சனி-காயத்ரி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதற்கு உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை மியூசிக் அகாதெமி தலைவர் என். முரளிக்கு, கர்நாடக பாடகிகள் ரஞ்சனி-காயத்ரி ஒரு கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தை அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவேற்றம் செய்திருந்தனர்.

அந்த கடிதத்தில், சென்னை மியூசிக் அகாதெமியின் இசை மாநாடு, டி.எம். கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் என்பதால், தாங்கள் பங்கேற்கப்போவதில்லை என்று ரஞ்சனி - காயத்ரி இணையினர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை மியூசிக் அகாதெமி, இசைக் கலைஞர்கள் மற்றும் கர்நாடக இசை ரசிகர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். கர்நாடக இசை உலகத்துக்கு மிகப்பெரிய சேதத்தை கிருஷ்ணா ஏற்படுத்தியிருக்கிறார் என்றும், மிகவும் போற்றப்படும் தியாகராஜர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றவர்களை அவமரியாதை செய்தார் என்றும் இசைப் பாடகியான சகோதரிகள் தெரிவித்துள்ளனர். எனவே நாங்கள், சென்னை மியூசிக் அகாதெமியின் ஒட்டுமொத்த கூட்டத்தையும் புறக்கணிக்கிறோம் என்றும், ஆண்டு இறுதியில் தொடங்கி ஜனவரியில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்றும் மியூசிக் அகாதெமியை மறைமுகமாக மிரட்டும் தொணியில் கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி, ஹரிகதா புகழ் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மியூசிக் அகாதெமி தலைவர் என். முரளி கூறுகையில், பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், மியூசிக் அகாதெமிக்கு அனுப்பியிருக்கும் கடிதம் தேவையற்ற மற்றும் அவதூறான கூற்றுக்கள் மற்றும் அவதூறுகளை தூண்டும் வகையில், மரியாதைக்குரிய மூத்த சக-இசைக்கலைஞருக்கு எதிரான கடுஞ்சொற்கள் நிரம்பியதாக இருக்கிறது.

மேலும், டி.எம். கிருஷ்ணா, சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, மார்கழி மாதத்தில் நடைபெறும் இசைக் கச்சேரியில் கலந்துகொள்ள மாட்டோம் என்று பாடகிகள் எடுத்திருக்கும் முடிவானது, இசைக் கலைஞர்களுக்கு ஏற்புடையது அல்ல என்றும் மிக மோசமான செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை மியூசிக் அகாதெமிக்கு அனுப்பிய கடிதத்தை, தாங்கள் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருப்பது என்பது, இந்த கடிதத்தின் காரணத்தையும், அதன் பின்னணியையும் சந்தேகமடைய வைக்கிறது என்றும் முரளி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருவரது இசைத் திறனை அடிப்படையாக வைத்தே விருது வழங்கப்படுவதாகவும், இந்த ஆண்டு டி.எம். கிருஷ்ணாவுக்கு, அவரது வெளிப்படையான, ரசிகர்களிடையே இருக்கும் செல்வாக்கு, விதிவிலக்கான இசை வாழ்க்கைக்காகவே செயற்குழுவால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டி.எம். கிருஷ்ணா, சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதற்கு, இசைக் கலைஞர் விசாகா ஹரி, திருச்சூர் சகோதரர்கள் கிருஷ்ண மோகன் மற்றும் ராம்குமார் மோகன் உள்ளிட்டோரும் தங்களது பங்குக்கு, எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கு எல்லாம் மேலாக, சித்ரவீணை ரவிக்கிரண் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மியூசிக் அகாதெமி தனக்கு வழங்கிய சங்கீத கலாநிதி விருதை திருப்பித் தர முடிவு செய்திருக்கிறேன் என்றும், எதையும் விட கொள்கை முக்கியம் என்பதை பரிசீலித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement