For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காரை ஒரமாக நிறுத்திவிட்டு ஆட்டோவில் சென்ற ஸ்ருதிஹாசன்…!

09:57 AM May 09, 2024 IST | shyamala
காரை ஒரமாக நிறுத்திவிட்டு ஆட்டோவில் சென்ற ஸ்ருதிஹாசன்…
Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தமிழ், தெலுங்கு மொழி மட்டுமன்றி பாலிவுட் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் ஸ்ருதி இசை அமைத்து பாடிய இனிமேல் என்ற இசை ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது மும்பையில் தங்கியுள்ள இவர், அங்கு ஒரு பாலிவுட் படத்தில் கமிட்டாகி உள்ளார். மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் பங்கேற்று வருகிறார்.

Advertisement

அந்த வகையில், படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக, ஸ்ருதிஹாசன் காரில் சென்று கொண்டிருந்தபோது, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். காரில் அவரால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனது. இதையடுத்து, அவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, ஆட்டோ பிடித்து அதில் பயணம் செய்தார். இதையடுத்து, அவர் ஆட்டோவில் சென்ற வீடியோவையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன் ஆட்டோவில் சென்றது புத்திசாலித்தனமான முடிவு என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முன்பாக, நடிகர் அமிதாப் பச்சனும் போக்குவரத்து நெரிசல் காரணமாக காரை ஒதுக்கிவிட்டு, ஆட்டோவில் பயணித்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கஞ்சாவுடன் சிக்கிய சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்! கோர்ட் அதிரடி..

Tags :
Advertisement