For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இப்படியெல்லாம் பண்ணலாமா’..? தவெக தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார்..!!

02:23 PM Apr 20, 2024 IST | Chella
’இப்படியெல்லாம் பண்ணலாமா’    தவெக தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார்
Advertisement

பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மீது காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

இந்தியாவின் 18-வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று வாக்களித்தனர்.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நண்பகல் அளவில் வாக்களிக்க சென்றார். ரசிகர்களின் கூட்டம் அதிகரித்தால், நடிகர் விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

இந்நிலையில், விஜய் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், 200-க்கும் மேற்பட்டோருடன் விஜய் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். தேர்தல் விதிமுறையை மீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Read More : மலைபோல் குவிந்த ஆர்டர்கள்..!! அசால்ட் செய்த பிரியாணி மாஸ்டர்கள்..!! தேர்தல் சுவாரஸ்யம்..!!

Advertisement