For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களை ஸ்வீட்டி, பேபி' என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தல் அல்ல!… உயர்நீதிமன்றம் கருத்து!

08:41 AM May 10, 2024 IST | Kokila
பெண்களை ஸ்வீட்டி  பேபி  என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தல் அல்ல … உயர்நீதிமன்றம் கருத்து
Advertisement

Court: ஸ்வீட்டி' அல்லது 'பேபி' போன்ற சொற்கள் எப்போதும் பாலியல் துன்புறுத்தலாக இருக்காது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

கடலோர காவல் படையில் பணிபுரியும் பெண் ஒருவர், தனது மேலதிகாரி தன்னை ஸ்வீட்டி, பேபி உள்ளிட்ட வார்த்திகளை பயன்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து, நான் ஒருபோதும் பாலியல் துன்புறுத்தல் நோக்கத்தில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்று மேலதிகாரி தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அந்த பெண் புகார் அளித்ததை தொடர்ந்து இதுபோன்ற வார்த்தைகளை நிறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சப்யசாச்சி பட்டாச்சார்யா, ஸ்வீட்டி' அல்லது 'பேபி' போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது பொருத்தமற்றது என்றும் அவை எப்போதும் பாலியல் துன்புறுத்தலாக இருக்கவேண்டியதில்லை என்று குறிப்பிட்டார். POSH சட்டத்தின் விதிகளை தவறாகப் பயன்படுத்துவது பெண்களுக்கு அதிக கண்ணாடி கூரைகளை உருவாக்கக்கூடும் என்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.

சட்டமே போதுமான பாதுகாப்பை வழங்குவதால் (சரியாகவே, பெண்கள் பணியிடங்களில் அடிக்கடி எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களைக் கருத்தில் கொண்டு), புகார்தாரருக்கு மன்றங்களில் தீர்ப்பளிப்பதன் மூலம் இரட்டை அடுக்கு பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டால், அதிகப்படியான துஷ்பிரயோகம் காரணமாக, எதிர்விளைவாக இருக்கலாம். சட்டத்தின் விதிகள் அவை அகற்றுவதை விட அதிக பிரச்சனைகளை உருவாக்கும். கடினமாக உழைக்கும் பெண் நபர்களின் வேலைவாய்ப்பில் தடைகளை உருவாக்கும்" என்று நீதிபதி பட்டாச்சார்யா மேலும் கூறினார்.

Readmore: இந்திய உணவுப் பொருட்களில் என்ன தவறு?… கலப்பட மசாலாப் பொருள்களை எப்படி கண்டறிவது?

Advertisement