For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாய்ப்புக்காக ஆபாசப் படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிடும் நடிகைகள்...!! அம்மா அம்மா என்று சொல்லிவிட்டு இப்படி செய்வதா..?

Actor Ranganathan has said in an earlier interview that I will continue, continue and continue to talk about actors and actresses.
12:17 PM Sep 25, 2024 IST | Chella
வாய்ப்புக்காக ஆபாசப் படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிடும் நடிகைகள்      அம்மா அம்மா என்று சொல்லிவிட்டு இப்படி செய்வதா
Advertisement

நடிகர், நடிகைகள் குறித்து நான் பேசுவது தொடரும், தொடரும், தொடர்ந்து கொண்டே இருக்கும் என முன்னதாக ஒரு பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

Advertisement

சினிமா நடிகரும், நடிகைகளை விமர்சிப்பவருமான பயில்வான் ரங்கநாதன், பிரபல நடிகை பற்றி தெரிவித்த தகவல்களுக்கு டான்ஸ் மாஸ்டர் ஒருவர் கடுமையாக விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலடியாக யூடியூப் ஒன்றில் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அதில், ”‘தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்களை தான் நான் விமர்சிக்கிறேன். வெளிச்சம் போட்டு காட்டுகிறேன். தனிமனித ஒழுக்கம் என்றால் என்ன? ஒவ்வொரு மனிதனும் உண்மையோடும் மனசாட்சியோடும் வாழ வேண்டும்.

தனி மனித ஒழுக்கம், சினிமாவில் 100க்கு 99 சதவீதம் இல்லவே இல்லை. நான் ஒருவரைப் பற்றி பேசுகிறேன் என்று சொன்னால், ஆதாரத்துடன் பேசுகிறேன். அனுபவித்ததை பேசுகிறேன், பார்த்ததை பேசுகிறேன். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்களை தான் பேசுகிறேன். தனி மனித ஒழுக்கம் சினிமாவுக்கு தேவையா? இல்லையா? சினிமாவில் இருந்து கொண்டு நீங்களே சினிமாவை இப்படி பேசலாமா? என்று கேட்கிறார்கள். சினிமாவில் நான் இருப்பதால், அந்த குறையை சொல்லக் கூடாதா?

வாய்ப்புக்காக தங்கள் ஆபாசப்படங்களை சினிமா நடிகைகள் தங்கள் வலைதளத்தில் பதிவு செய்கிறார்களா? இல்லையா? இது தனி மனித ஒழுக்கமா? அவர்கள் ஆபாச படங்கள் வெளியிடுவது தவறில்லை, ஆனால், நான் சொல்வது தவறா? இது தவறு என்று டான்ஸ் மாஸ்டர் கூறுகிறார். அந்த டான்ஸ் மாஸ்டர், ஒரு நடிகையின் அன்னையை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். தனி மனித ஒழுக்கம் இங்கே வாழ்கிறதா? கம்ப ராமாயணத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தன. ஆனால், கம்பரசம் என்கிற நூலை அண்ணா எழுதினார். லட்சக்கணக்கில் விற்றது. பேரறிஞர் அண்ணா என்ன கம்பராமாயணத்தை குறை சொன்னாரா? ராமரை குறை சொன்னாரா? ராமாயணத்தில் உள்ள காம விசயங்களை கூறியிருந்தார் அவ்வளவு தான்.

சினிமாவில் இருப்பவர்கள் எல்லாரையும் போல சாதாரணமானவர்கள் தான். என்னை குறை சொன்ன டான்ஸ் மாஸ்டர் வீடியோவை 300 பேர் தான் பார்த்திருக்கிறார்கள். நான் பேசியதை லட்சக்கணக்கானோர் பார்க்கிறார்கள். நீங்கள் டான்ஸ் ஆடி சம்பாதிக்கிறீங்க, நாங்க யூடியூப்பில் பேசுறோம். எல்லாம் ஒன்னு தானே. எஸ்.வி. சேகர் சமீபத்தில் என்னிடம் பேசினார், இதைப்பற்றி பேசுங்கள் என்று தட்டிக் கொடுத்தார். நீங்கள் தைரியமா பேசுங்கள் என்று கூறினார். ராதாரவி பேசினார், ‘உன்னைப்பற்றி நிறைய பேர் புகார் சொன்னாங்க, அவன் என்ன தப்பா பேசுனாரு? சொல்லு என்று கேட்டேன்’ என்று கூறினார்.

சினிமாவில் ஆனந்தராஜ், நதியா மாதிரி விதிவிலக்கான நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், எல்லாரும் அந்த மாதிரி இல்லை. நிறைய நடிகைகள் தங்களின் வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பவில்லை. அதற்கு காரணம், அவர்கள் சந்தித்த அனுபவங்கள் தான். தனி மனித ஒழுக்கம் இல்லாத நடிகர், நடிகைகள் குறித்து நான் பேசுவது தொடரும், தொடரும், தொடர்ந்து கொண்டே இருக்கும். பகலில் அம்மா வேடம் போடும் நடிகையை அம்மா அம்மா என்று அழைத்துவிட்டு, தண்ணி போட்ட பின், ‘ஏப்போ வெச்சிக்கலாம்…’ என அவர்களை டார்ச்சர் செய்வதாக பகிரங்கமாக புகார் வந்தது.

அண்ணே அண்ணே என்று சொல்லிவிட்டு, இரவில் அத்தான், மாமாவாக மாறிவிடுவார்கள். இதை நான் சொல்லவில்லை, மூத்தவர் சொல்லியிருக்கார். சினிமாவை கலாய்த்தவர்கள் எம்.ஆர்.ராதா, துக்ளக் சோ. எனக்கு அவர்கள் தான் வழிகாட்டுகள். அவர்கள் வழித்தோன்றல் தான் நான். நான் தவறு செய்தால் பாவம் என்னோடு. என்னை குறை சொல்லாதீர்கள், என்னை குறை சொல்பவர்களின் 4 விரல்கள் உங்களை குறை சொல்லும்’’ என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Read More : காதலனுக்காக காத்திருக்கிறாரா கனகா..? கமலுக்கு பயந்து ’நோ’ சொன்னது ஏன்..? பிரபலம் சொன்ன பகீர் தகவல்..!!

Tags :
Advertisement