For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிகாலையிலேயே அதிர்ச்சி..!! கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுன்ட்டர்..? திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

Police shot dead Richard Sachin, a rowdy who was arrested in a murder case in Dindigul.
07:21 AM Oct 04, 2024 IST | Chella
அதிகாலையிலேயே அதிர்ச்சி     கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுன்ட்டர்    திண்டுக்கல்லில் பரபரப்பு
Advertisement

திண்டுக்கல்லில் கொலை வழக்கு ஒன்றில் கைதான ரவுடி ரிச்சர்ட் சச்சின் என்பவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். விசாரணையின்போது தப்பிச் செல்ல முயன்றதாக ரிச்சர்ட்டின் வலது காலில் போலீசார் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரிச்சர்ட் சச்சின் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இர்பான் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரிச்சர்ட் சச்சின் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து கைப்பற்ற அழைத்துச் சென்றபோது தான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆயுதங்களை எடுத்துக் கொடுக்கும்போது, காவலர் அருணை ரிச்சர்ட் சச்சின் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில், சமீப காலமாக ரவுகளுக்கு எதிரான என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : இந்த மந்திரத்தை மட்டும் இப்படி சொல்லிப் பாருங்க..!! உங்கள் திருமணம் உடனே நடக்கும்..!!

Tags :
Advertisement