For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஜய் ஏற்றிய கொடிக் கம்பத்திற்கு பூஜை போட்ட புஸ்ஸி ஆனந்த்..!! குழப்பத்தில் தவெக..? என்னதான் நடக்குது..?

Political commentators have opined that Vijay is in a confused mood.
10:45 AM Oct 12, 2024 IST | Chella
விஜய் ஏற்றிய கொடிக் கம்பத்திற்கு பூஜை போட்ட புஸ்ஸி ஆனந்த்     குழப்பத்தில் தவெக    என்னதான் நடக்குது
Advertisement

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின், தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

இதில் பக்தி பரவசத்துடன் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சுவாமி படங்களுக்கு நிவார்தனை செய்து பொரிகடலை மற்றும் சுண்டல் ஆகியவற்றை வைத்து படையல் போட்டுள்ளார். தொடர்ந்து, விஜய் கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைத்த கொடி கம்பத்திற்கு பூஜை செய்யும் புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

குழப்பமான மனநிலையில் விஜய்..?

விஜய் குழப்பமான மனநிலையில் இருப்பதாக இதன் மூலம் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதலில் தந்தை பெரியார் பிறந்தநாளன்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்ததை வைத்து, விஜய் பெரியார் வழியில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு அவரது கட்சி லேட்டர் பேடில் விஜய் குங்கும பொட்டு வைத்ததுபோல் இருந்த புகைப்படம் அகற்றப்பட்டு, வெறும் நெற்றியோடு இருக்கும் புகைப்படம் அச்சிடப்பட்டது.

மேலும், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்தபோது விஜய்க்கு எதிர்ப்பும், ஒரு தரப்பில் ஆதரவும் எழுந்தது. இதற்கிடையே, மாநாட்டிற்கு பந்தல்கால் நடும் விழா நடந்தபோது பல்வேறு வகையில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், ஆயுத பூஜை கொண்டாட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நடந்திருப்பது, விஜய் குழப்பமான மனநிலையில் இருக்கிறாரா? என கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More : என் பொண்டாட்டியை பார்த்து எப்படி இப்படி சொல்லலாம்..?? கணவரின் செயலால் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..!!

Tags :
Advertisement