For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொடூரமாக கொலை செய்யப்பட்ட BSNL- உதவி பொறியாளர்.! முதல் மனைவி கைது.! நடந்தது என்ன.?

02:59 PM Dec 25, 2023 IST | 1newsnationuser4
கொடூரமாக கொலை செய்யப்பட்ட bsnl  உதவி பொறியாளர்   முதல் மனைவி கைது   நடந்தது என்ன
Advertisement

திருச்சி மாவட்டம் துறையூரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உதவி பொறியாளராக பணியாற்றிய நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது முதல் மனைவி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Advertisement

திருச்சி மாவட்டம் துறையூர் தேவாங்கர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(55). இவர் துறையூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு பத்மினி மற்றும் லலிதா என்ற இரண்டு மனைவிகள். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

அண்ணாதுரை மது பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து இருக்கிறார். நேற்று வழக்கம் போல் மது அருந்தி விட்டு வந்த அவர் தனது முதல் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவரை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பத்மினி நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி அண்ணாதுரையை கொலை செய்திருக்கிறார்

இதனைத் தொடர்ந்து அவரது இரண்டாவது மனைவி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அண்ணாதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பத்மினியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மது பழக்கத்தால் உதவி பொறியாளர் முதல் மனைவியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

Tags :
Advertisement