For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தம்பி..!! இந்த சேட்டை எல்லாம் என்கிட்ட வெச்சிக்காத..!! அண்ணாமலையை எச்சரித்த சீமான்..!!

05:40 PM Apr 04, 2024 IST | Chella
தம்பி     இந்த சேட்டை எல்லாம் என்கிட்ட வெச்சிக்காத     அண்ணாமலையை எச்சரித்த சீமான்
Advertisement

நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் விவகாரத்தில் ராமர் கோயிலில் சத்தியம் செய்வதற்கு அண்ணாமலைக்கு சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

சீமானின் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியது.

பின்னர், படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும், அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீமான், ”அயோத்தி ராமர் கோயிலில் நான் சத்தியம் செய்ய வருகிறேன். எனது சின்னம் பறித்ததற்கும் பாஜகவுக்கும் சம்மந்தம் இல்லை என்று அண்ணாமலை சத்தியம் செய்தால் நான் கட்சியை கலைத்துவிடுகிறேன். இந்த சேட்டை எல்லாம் வைச்சுக்க கூடாது.

டிடிவி தினகரன் இரண்டு தொகுதிகளில் நிற்கிறார். ஜி.கே வாசன் மூன்று தொகுதிகளில் நிற்கிறார். பாமக 10 தொகுதிகளில் நிற்கிறது. மீதியுள்ள தொகுதிகளில் சுயேட்சைகளுக்கு ஏன் அவர்களது சின்னத்தை கொடுக்கவில்லை. சீமானுக்கு கிடைக்கும் வாக்குகளை சிதைக்க முடிவு செய்துள்ளனர். உங்களுக்கு சின்னம் கொடுக்க 100 தடைகள் வருகிறது என்று தேர்தல் ஆணையரே சொல்கிறார். தாய் மொழி மீது பற்றில்லாத நீ எப்படி அரசியலுக்கு வருகிறாய். தாய் மொழி அழிந்து விட்டால் இனம் அழிந்துவிடும் என்ற அடிப்படை தெரியாதா?" என்று ஆவேசமாக பேசினார்.

Read More : Kachchatheevu | கச்சத்தீவு + ராமநாதபுரம் மன்னர்..!! அவர்களுக்கே சொந்தம்..!! அமைச்சர் சொன்னதை கவனிச்சீங்களா..?

Advertisement