For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | பதிவான வாக்குகளை அறிவிப்பதில் குழப்பம் ஏன்..? முதல்முறையாக விளக்கம் கொடுத்த சத்யபிரதா சாஹூ..!!

01:57 PM Apr 22, 2024 IST | Chella
breaking   பதிவான வாக்குகளை அறிவிப்பதில் குழப்பம் ஏன்    முதல்முறையாக விளக்கம் கொடுத்த சத்யபிரதா சாஹூ
Advertisement

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை கணக்கிடுவதில் மாறுபாடு நிகழ்ந்தது ஏன்.? என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் கூறுகையில், செயலியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிட்டதால், தவறு ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால், செயலியில் கிடைத்த தகவலை அறிவித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்குள் ரூ.50,000-க்கும் மேல் பணம் கொண்டு செல்வதற்கு இனி எந்த தடையும் இல்லை. ஆனால், அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனை தொடரும் எனக்கூறிய அவர், வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

Read More : பெண்ணை பலாத்காரம் செய்த நபரின் வீட்டை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்..!! குவியும் பாராட்டு..!!

Advertisement