முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING | தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்குகள் மூடல்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

01:59 PM Apr 10, 2024 IST | Chella
Advertisement

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

Advertisement

இதனையொட்டி, அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர், பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியும் இன்று (10.04.2024) தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்குகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அரசு-தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெடிக்கல், மளிகை கடைகள் போன்றவை வழக்கம்போல் செயல்படும் என்பதால், மக்கள் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Read More : ’விவாகரத்தான பெண்களுக்கு செக்..!! முன்னாள் கணவர்கள் நிம்மதி’..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

Advertisement
Next Article