For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

#BREAKING | பொன்முடியின் சிறை தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு..!! ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!!

10:56 AM Dec 21, 2023 IST | 1newsnationuser6
 breaking   பொன்முடியின் சிறை தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு     ஐகோர்ட் நீதிபதி உத்தரவு
Advertisement

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

Advertisement

இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு விதிக்கப்பட்ட ட்3 ஆண்டுகள் சிறை தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement