For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்..!! உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

01:48 PM Mar 20, 2024 IST | 1newsnationuser6
breaking   அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்     உச்சநீதிமன்றம் உத்தரவு
Advertisement

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.

Advertisement

அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அங்கித் திவாரியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி அங்கித் திவாரி 2 முறை மனுத் தாக்கல் செய்த போதும், அதை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், வழக்கில் ஜாமீன் கோரி அங்கித் திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதன்படி, மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சாட்டியங்கள் மற்றும் ஆதாரங்களை கலைக்கவோ அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது.

தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கும் உரிய அனுமதி பெறாமல் செல்லக் கூடாது. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்து, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Read More : உங்களுக்கு வெட்கமே இல்லையா..? திமுகவின் வாக்குறுதி வெறும் காகிதம் மட்டும்தான்..!! விளாசிய அண்ணாமலை..!!

Advertisement