For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி..? சென்னை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்..!!

Sandeep Roy Rathore, who was the Commissioner of Police in Chennai, has been transferred.
12:37 PM Jul 08, 2024 IST | Chella
breaking   ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி    சென்னை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்
Advertisement

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Advertisement

இந்நிலையில் தான், தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக அருண் என்பவரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது தப்பியோடிய நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

Read More : இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு..!! தமிழில் எழுத படிக்க தெரியுமா..? சம்பளம் எவ்வளவு..?

Tags :
Advertisement