For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புனே கார் விபத்து : 'பணம் தரோம்' ஓட்டுநருக்கு நெருக்கடி கொடுத்த புகாரில் சிறுவனின் தாத்தா கைது..!

01:33 PM May 25, 2024 IST | Mari Thangam
புனே கார் விபத்து    பணம் தரோம்  ஓட்டுநருக்கு நெருக்கடி கொடுத்த புகாரில் சிறுவனின் தாத்தா கைது
Advertisement

புனே சொகுசு கார் விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திரா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். கார் ஓட்டுநர் கங்காராமை மிரட்டி, கார் விபத்து பழியை ஏற்க துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கடந்த 19-ம் தேதி அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன், தற்போது சிறார் சீர்திருத்த முகாமில் உள்ளார். புனேவின் கல்யாணி நகர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சிறுவன் மோதினார். இதில் ஐடி ஊழியர்களான அனீஷ் அவாதியா (24), அஸ்வினி கோஸ்டா (24) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து, காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். இருந்தும் அடுத்த 15 மணி நேரத்தில் அவருக்கு சிறார் நீதி வாரியம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இரு உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த சிறுவனுக்கு உடனடியாக ஜாமின் வழங்கியது சர்சசையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினரும் இது குறித்து விமர்சித்தனர். இந்த சூழலில் சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனுக்கு மதுபானம் பரிமாறிய மதுபானக் கூட ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தகுந்த நேரத்தில் விபத்து குறித்த தகவலை கொடுக்க தவறிய காவலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே புனே போர்ஷே கார் விபத்து தொடர்பாக புனே போலீசார் சில பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். அதாவது காரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவனுக்குப் பதிலாக டிரைவர் தான் அந்த காரை ஓட்டியது போலக் காட்ட முயற்சிகள் நடப்பதாக புனே காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார்.

இந்த விபத்தால் சிறுவனுக்குப் பிரச்சினை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக விபத்து நடந்த உடனேயே டிரைவர் தான் காரை இயக்கினார் என்பது போலக் காட்ட முயற்சிகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.. புனே சொகுசு கார் விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திரா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். கார் ஓட்டுநர் கங்காராமை மிரட்டி, கார் விபத்து பழியை ஏற்க துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement