For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பகீர்..!! ஆபாச படம் பார்த்து தங்கையை கற்பழித்த 13 வயது சிறுவன்..!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

Boy Rapes Younger Sister After Watching Porn, Kills Her; Mother, 2 Sisters Help in Cover-up
10:12 AM Jul 28, 2024 IST | Mari Thangam
பகீர்     ஆபாச படம் பார்த்து தங்கையை கற்பழித்த 13 வயது சிறுவன்     விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
Advertisement

ஏப்ரல் 24-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியர் தாய், 13 வயது சகோதரன், சிறுமியின் இரண்டு சகோதரிகளை(18) போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் 13 வயது சகோதரர் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளான். சம்பவம் நடந்த அன்று இரவில் சிறுமியின் அருகில் அந்த சிறுவன் தூங்கியுள்ளார். அப்போது ஆபாச படங்களை பார்த்து அடிமையான சிறுவன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி இதை தந்தையிடம் கூறுவேன் என்று மிரட்டியபோது, ​​சிறுவன் அவளை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளான். பின்னர் நடந்த சம்பவத்தை சிறுவன் தனது தாயிடம் கூறியுள்ளான்.

தாய் செய்த செயல் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு உயிர் இருப்பதை கண்ட தாய், மீண்டும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதற்கிடையில், அவரது இரண்டு மூத்த சகோதரிகளும் விழித்தெழுந்தனர், அவர்களிடம் நடந்ததை கூறி, படுக்கையின் இடத்தை மாற்றிக்கொண்டனர். பின்னர் உயிரிழந்த சிறுமியின் சடலத்தை வீட்டு முற்றத்தில் போட்டு நாடகம் ஆடியது விசாரணையில் அம்பலம் ஆனது. இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Read more ; திகார் சிறையில் அதிர்ச்சி! கொடிய நோயால் பலியாகும் கைதிகள்!. 125 பேருக்கு எய்ட்ஸ்!.

Tags :
Advertisement