சூப்பர் அறிவிப்பு... TNPSC போட்டி தேர்வு எழுதும் நபர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான புத்தகம்...!
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஒட்டப்பட்டியில் டாக்டர் அம்பேத்கார் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் தலா 20,000 மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து, மாணவ, மாணவியர்கள் போட்டித்தேர்வுக்கு பயில மாணவர் விடுதி நூலகத்திற்கு ரூ.10,000 மதிப்பிலான TNPSC போட்டி தேர்வு புத்தகங்களை வழங்கினார்.
டாக்டர் அம்பேத்கார் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவ விடுதியில் 420 ஆதிதிராவிடர் நல மாணவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் 28 அறைகளுடன். சுமார் 200 மாணவர்கள் உணவு அருந்தும் வகையிலான உணவு கூடம், சமையல் அறை, பொருட்கள் வைப்பு அறை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் இவ்விடுதி கட்டப்பட்டுள்ளது. மாணவிகள் விடுதியில் 100 மாணவிகள் உள்ளனர்.
மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ரூ.20,000 மதிப்பிலான 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் செயல்பாடு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டித்தேர்வுக்கு பயில மாணவ விடுதி நூலகத்திற்கு ரூ.10,000 மதிப்பிலான TNPSC போட்டி தேர்வு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.