முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஹோட்டலில் ரூம் போட்டு நீட் தேர்வு மாணவியுடன் உல்லாசம்..!! மெட்ரோ ரயில் நிலையத்தில் ரத்தக் காயங்களுடன் மீட்பு..!! நடந்தது என்ன..?

An incident in Jaipur, Rajasthan, where a student was lured into a love trap and raped on the pretense of marrying her, has come to light.
07:54 AM Oct 18, 2024 IST | Chella
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாணவியை காதல் வலையில் சிக்க வைத்து திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். பாலியல் பலாத்காரம், காதல் துரோகத்தின் மன அழுத்தம் காரணமாக ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட மைனர் பெண், நியூ ஆத்திஷ் மார்க்கெட் அருகே உள்ள மெட்ரோ நிலையத்தில் இருந்து குதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதையடுத்து, மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தனது மகளை ஹோட்டலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவளை கொலை செய்வதற்காக மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெளியே தள்ளிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மாணவி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஜெய்ப்பூரில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வருவதாக போலீசாரிடம் தந்தை கூறியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட குணால் மீனா என்பவர், ஜோத்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்து மகேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குணால் மீனா செப்டம்பர் 27ஆம் தேதி மீண்டும் ஜெய்ப்பூருக்கு வந்து மாணவியை நியூ ஆத்திஷ் சந்தைக்கு அழைத்துள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தன்னுடைய வாழ்க்கையில் இருந்து விலகி இருக்குமாறும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கீழே உள்ள புதர்களில் ஒரு வழிப்போக்கர் ஒருவரால் காயமடைந்த நிலையில், மாணவி மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக குணால் மீனாவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More : அண்ணிக்கு பீட்சா ஊட்டிவிட்ட கணவன்..!! ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மனைவி..!! கடைசியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்..!!

Tags :
நீட் தேர்வுபாலியல் பலாத்காரம்மாணவிராஜஸ்தான் மாநிலம்
Advertisement
Next Article