முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னையில் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! காவல்துறை உயரதிகாரியின் மகள் பெயரில் வந்ததால் பரபரப்பு..!!

01:43 PM Mar 21, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு தமிழக காவல்துறை உயர் அதிகாரி மகளின் பெயரில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் சமீப காலமாக மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பிரபல பல்வேறு பள்ளிகளுக்கு மெயில் முலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பள்ளிகள், பேருந்து நிலையம் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து தமிழக மற்றும் சென்னை காவல்துறை தீவிர‌ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மெயில் முலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் மிரட்டல் விடுத்த நபர் குறித்த தகவல்களை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு சவாலாக இருந்தது வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை சென்னை ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளியான பிஎஸ்எஸ்பி மில்லினியம் பள்ளிக்கு மெயில் முலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

உடனே பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், புனித தோமையார் மலை போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. பின்னர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மெயில் தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது, தமிழக காவல்துறை உயர் அதிகாரி ஒருவரின் மகள் பெயரில் (daudee_ jiwal@mail2tor.com) போலியான மெயிலை உருவாக்கி மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Read More : Election | விளவங்கோடு இடைத்தேர்தல்..!! அதிமுக வேட்பாளராக ராணி அறிவிப்பு..!!

Advertisement
Next Article