For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!! அடுத்தடுத்த வந்த மின்னஞ்சலால் பரபரப்பு..!!

There has been a lot of commotion due to the email threat of a bomb at the Chennai airport.
10:59 AM May 27, 2024 IST | Chella
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்     அடுத்தடுத்த வந்த மின்னஞ்சலால் பரபரப்பு
Advertisement

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் இரவு மற்றும் அதிகாலை என இரண்டு மின்னஞ்சல் மூலமாக வந்த மிரட்டலில், 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, எச்சரிக்கையான போலீசார், இன்று அதிகாலை விமான நிலையத்தில், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். பல மணி நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read More : பெண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்..!! ரூ.22 லட்சம் கிடைக்கும்..!! பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement