For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Bomb | பள்ளிகளில் மீண்டும் வெடிகுண்டா..? பதறியடித்து ஓடிய மாணவர்கள்..!! பெற்றோர்கள் அதிர்ச்சி..!!

04:58 PM Mar 04, 2024 IST | 1newsnationuser6
bomb   பள்ளிகளில் மீண்டும் வெடிகுண்டா    பதறியடித்து ஓடிய மாணவர்கள்     பெற்றோர்கள் அதிர்ச்சி
Advertisement

சென்னை, கோவையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை, கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

Advertisement

இந்நிலையில், மீண்டும் 2 பள்ளிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது. சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் தனியார் பள்ளி மற்றும் கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு இரு பள்ளிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

அந்த பள்ளிகளில் இன்று தேர்வுகள் நடைபெறும் நிலையில், முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் அப்பகுதிகளில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Read More : ISRO தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய் பாதிப்பு..!! ஆதித்யா விண்கலம் ஏவப்பட்ட நாளில் நடந்த அதிர்ச்சி..!!

Advertisement