முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வழியும் ரத்தம்..! நெற்றியில் "பெரிய காயம்" அவசர சிகிச்சை பிரிவில் மம்தா பானர்ஜி..!

10:03 PM Mar 14, 2024 IST | 1Newsnation_Admin
Advertisement

இந்தியாவில் இன்னும் சில தினங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி ஆறிவிக்கப்படும் நிலை உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Advertisement

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானெர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயங்களுடன் ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இது குறித்து பதிவில், "நம்முடைய தலைவர் மம்தா பானர்ஜி தீவிர காயமடைந்துள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் மம்தா பானர்ஜிக்கு எப்படி வியாபித்து ஏற்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.

மம்தா பானர்ஜிக்கு வீட்டில் விழுந்து அடிபட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. தற்போது அவர் கொல்கத்தாவில் அரசு நடத்தி வரும் எஸ்.எஸ்.கே.எம் என்ற மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மம்தா பானர்ஜிக்கு ரத்தக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு வாங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து களமிறங்குகிறது. தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

Tags :
Mamata Banerjee Suffered Major Injury
Advertisement
Next Article