'சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்யும் பாஜக’..!! அட்டாக் செய்த அமைச்சர் சேகர்பாபு..!!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கோயில்களில் தூய்மை பணி மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வகையில், கடந்த வாரம் மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலின் வளாகத்தை பிரதமர் மோடி சுத்தம் செய்தார். மேலும், அவர் செல்லும் ராமர் கோயில்களில் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார்.
அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் கோயிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து கோயிலை அண்ணாமலை கழுவினர். அவருடன் பாஜக நிர்வாகிகளும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ”சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவில்தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்காக ஆளுநர் துணை போய் சுத்தம் செய்கிறேன் என்று புறப்பட்டுள்ளார்” என்றார்.