தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி..!! டாஸ்மாக் கடைகள் மூடல்..!! கள்ளுக்கடைகள் திறப்பு..!! அண்ணாமலை அதிரடி..!!
தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், ”70 ஆண்டு காலம் ஆரணி நகராட்சி வளர்ச்சி அடையவில்லை. ஆரணி பற்றி பிரதமர் மோடி அவர்கள் 3 முறை பேசி உள்ளார். ஆனால், ஆரணி பற்றி தமிழக முதல்வர் எங்கையாவது பேசி இருக்காரா? திமுக ஆட்சியில் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கிவிட்டு மக்களை அடிமை போல் நடத்துகின்றனர்.
ஊழல் இல்லாத அரசாக மத்தியில் 10 ஆண்டு காலம் பாஜக ஆட்சி செய்தது. 76 அமைச்சர்களும் நேர்மையானவர்கள். அயோத்தியில் ராமர் கோவிலை யாரையும் மிரட்டி கட்டவில்லை. அனைத்து மக்களையும் ஒன்றினைத்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் இணைந்து கட்டிய கோவில் தான் ராமர் கோயில். தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி தழைத்தோங்கி வருகிறது. மோடி குடும்ப ஆட்சியை அடியோடு வெறுகிறார். குடும்ப ஆட்சி கோபாலபுரத்தில் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் உள்ள எம்எல்ஏ, எம்பி, உள்ளாட்சி என அனைவரும் குடும்ப ஆட்சி செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் 5 மொழியை பாஜக கொண்டு வரும். மக்களின் விருப்பத்திற்கு போல் மொழி கல்வி கற்கலாம். 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை, டாஸ்மாக் கடையை குறைத்து கள்ளு கடையை திறக்கப்படும். இந்தியாவில் மோடிக்கு எதிராக களம் காண வேட்பாளர் யாரும் இல்லை. பிரதமர் வேட்பாளர் என்றால் இந்தியாவில் மோடி அவர்கள் மட்டுமே. 2024 தேர்தலை பொறுத்தவரை இந்தியா முழுவதும் ஒரே வேட்பாளர் மோடி” என அண்ணாமலை தெரிவித்தார்.