For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BJP | புதுக்கோட்டை சமஸ்தான இளவரசி பாஜகவில் இணைந்தார்..!! அண்ணாமலை வரவேற்பு..!!

05:11 PM Mar 06, 2024 IST | 1newsnationuser6
bjp   புதுக்கோட்டை சமஸ்தான இளவரசி பாஜகவில் இணைந்தார்     அண்ணாமலை வரவேற்பு
Advertisement

புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி, பாஜகவில் இணைந்துள்ளதற்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியும், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையுமான ராதா நிரஞ்சனி ராஜாயி தொண்டைமான் பாஜகவில் இணைந்துள்ளார். அவரை வரவேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

'புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியும், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையும், சிறந்த சமூக சேவகியுமான, சகோதரி, ராஜகுமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி, பிரதமர் மோடியின் நல்லாட்சியாலும், ஆளுமைத் திறனாலும் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, மூத்த தலைவர்கள் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்கள். அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

மேலும், புதுக்கோட்டை சமஸ்தான மகாராஜா ராஜகோபால தொண்டைமான், 1948ஆம் ஆண்டு, சுதந்திர இந்தியாவுடன், புதுக்கோட்டை சமஸ்தானத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் இணைத்து, சமஸ்தானத்திற்குச் சொந்தமான 48 லட்சம் ரூபாய் நிதியையும், மொத்த சொத்துக்களையும், நமது நாட்டிற்கே வழங்கியவர். புதுக்கோட்டை, தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டபோது, தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க வழங்கியவர்.

நாட்டுக்காக, மக்கள் நலனுக்காகவே வாழ்ந்த பெரும் பாரம்பரியம் மிக்க ராஜகுடும்பத்தில் இருந்து, சமூகத்திற்காகவும், பொதுமக்களுக்காகவும் உழைப்பதற்கு முன்வந்திருக்கும் சகோதரி ராதா நிரஞ்சனி தொண்டைமான் அவர்களின் வருகை, பாஜகவுக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்பது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : Lok Sabha தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டி..? சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு..!!

Advertisement