முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’அண்ணாமலை வெற்றி பெற கைவிரலை துண்டித்த பாஜக நிர்வாகி’..!! பரபரப்பு சம்பவம்..!!

02:07 PM Apr 18, 2024 IST | Chella
Advertisement

கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற பாஜக நிர்வாகி ஒருவர் கைவிரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கடலூர் மாவட்டம் ஆண்டாள் முள்ளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம். இவர், அந்த மாவட்டத்தின் பாஜக துணைத்தலைவராக உள்ளார். கோவை மக்களவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வந்தனர்.

அந்த வகையில், கடந்த சில தினங்களாக கோவையில் துரை ராமலிங்கம் தங்கி பரப்புரை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், திடீரென தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து தனது இடது கை ஆட்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார். அவர், அப்போது அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று முழக்கமிட்டவாறே துண்டித்தார்.

இதனை பார்த்த சக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு விரல் இணைக்கப்பட்டது. இதே போல கர்நாடகாவைச் சேர்ந்த அருண் வார்னகேர் என்பவர் மோடி மீண்டும் முறையும் பிரதரமராக வேண்டும் என்று தனது இடது கை ஆள்காட்டி விரலை வெட்டி காளிக்கு பலி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Read More : நாளை வாக்குப்பதிவு..!! ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்..!!

Advertisement
Next Article