For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிரடி...! வந்த முதல் நாளே மீட்பு பணி..! கையெழுத்து போட்டு உறுதி அளித்த அண்ணாமலை...!

06:17 AM Apr 02, 2024 IST | Vignesh
அதிரடி     வந்த முதல் நாளே மீட்பு பணி    கையெழுத்து போட்டு உறுதி அளித்த  அண்ணாமலை
Advertisement

கோவை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் முதல் நாளே நொய்யல் ஆறு மீட்ககப்படுவதற்கான பணிகளை தொடங்குவேன் என பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை உறுதிமொழி அளித்துள்ளார். பா.ம.க மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கோரிக்கை ஏற்று கையெழுத்திட்ட உறுதிமொழியை வெளியிட்டார் அண்ணாமலை.

Advertisement

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் வழித்தடம் உள்ளது. இந்த பகுதியில் அணைக்கட்டு ஒன்றும் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு வளம் செழித்து காணப்பட்ட இந்த நொய்யல் ஆறு தற்போது தொழிற்சாலை கழிவுகள், குடியிருப்பு கழிவுகள் உள்ளிட்டவை கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

குடியிருப்புகளின் கழிவு நீரும், தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகளும் நொய்யல் ஆற்றில் கலந்துவிடப்படுகின்றன. இதன் விளைவாக மழைக்காலங்களில் ஆற்றில் நீர் ஓடும்போது மாசடைந்த தண்ணீர் குளங்களை நிரப்புகிறது. இதனால், நிலத்தடி நீரின் தரம் பாதிக்கப்படுவதோடு, குளத்தில் வசிக்கும் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. இந்த நிலையில் பாஜக கோவை எம்.பி வேட்பாளர் அண்ணாமலை தான் போட்டியிட்டு வெற்றி பெற்றால் நொய்யல் ஆற்றுப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படும் என தெரிவித்திருந்தார்.

கோவை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் முதல் நாளே நொய்யல் ஆறு மீட்ககப்படுவதற்கான பணிகளை தொடங்குவேன் என பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை உறுதிமொழி அளித்துள்ளார். பா.ம.க மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கோரிக்கை ஏற்று கையெழுத்திட்ட உறுதிமொழியை வெளியிட்டார் அண்ணாமலை.

Advertisement