For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மத்திய அமைச்சரின் காரில் மோதி பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக தொண்டர் பலி..!! பெரும் பரபரப்பு..!!

04:53 PM Apr 08, 2024 IST | Chella
மத்திய அமைச்சரின் காரில் மோதி பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக தொண்டர் பலி     பெரும் பரபரப்பு
Advertisement

பெங்களூருவில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே கார் கதவில் இருசக்கர வாகனம் மோதி, பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (35). பாஜக தொண்டரான இவர், பெங்களூரு வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கே.ஆர்.புரம் விநாயகர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த அமைச்சர் ஷோபா கரந்தலஜேவின் கார் கதவு திறந்திருந்தது. அப்போது பிரகாஷின் இருசக்கர வாகனம் கார் கதவு மீது மோதியதில் அவர் சாலையில் தடுமாறி விழுந்தார்.

அப்போது அந்த வழியே வந்த தனியார் பேருந்து பிரகாஷ் மற்றும் அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரகாஷை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், பிரகாஷின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர் ஷோபா கரந்தலஜே, இந்த விபத்து குறித்த விசாரணையில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் காரில் மோதி, பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா..? எப்படி தெரிந்து கொள்வது..?

Advertisement