For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவகாரத்துக்கு பின் சாகும் நிலைக்கு தள்ளப்பட்ட பிக்பாஸ் நடிகை..!! கார்ல தான் தூங்குவேன்..!! என்கூட யாருமே இல்ல..!!

When I got divorced, people in my circle of friends started thinking that I was difficult to be with. My family thought that all my decisions were wrong.
12:40 PM Aug 01, 2024 IST | Chella
விவகாரத்துக்கு பின் சாகும் நிலைக்கு தள்ளப்பட்ட பிக்பாஸ் நடிகை     கார்ல தான் தூங்குவேன்     என்கூட யாருமே இல்ல
Advertisement

இந்தி தொலைக்காட்சி தொடர்கள், வெப்தொடர்கள், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி மொழி படங்களில் நடித்து வருபவர் ரஷமி தேசாய். இவர், சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக்பாஸ் 13-வது சீசனில் கலந்து கொண்டார். பிக்பாஸ் 15 நிகழ்ச்சியில் ஒயில்டு கார்டு மூலம் கலந்து கொண்டார். ரஷமிக்கு தன்னுடன் சேர்ந்து நடித்த நந்திஷ் சந்து மீது காதல் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் கடந்த 2011இல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், 2014இல் அவர்கள் பிரிந்து, 2016ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

Advertisement

இந்நிலையில், விவாகரத்தானதும் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து தற்போது பேசியிருக்கிறார் ரஷமி தேசாய். அவர் கூறுகையில், ”அந்த நேரத்தில் வீடு வாங்கியிருந்தேன். அந்த வீட்டிற்காக ரூ. 2.5 கோடி லோன் எடுத்தேன். ரூ.3.5 கோடி கடன் இருந்தது. எல்லாம் நன்றாக செல்கிறது என நினைத்தேன். ஆனால், திடீரென்று என் ஷோவை நிறுத்திவிட்டார்கள். நான்கு நாட்கள் தெருவில் இருந்தேன். என்னிடம் ஆடி ஏ6 கார் இருந்தது. அதில் தான் தூங்கனேன். என் பொருட்களை மேனேஜர் வீட்டில் வைத்திருந்தேன்.

என் குடும்பத்தாருடன் தொடர்பு இல்லாமல் போனது. அந்த நாட்களில் ரிக்ஷாவாலாக்கள் ரூ.20-க்கு சாப்பாடு சாப்பிடுவார்கள். அதில் சாதம், சாம்பார், இரண்டு சப்பாத்தி இருக்கும். சாப்பாட்டில் கல் இருக்கும். இருந்தாலும் வேறு வழியில்லாமல் சாப்பிட்டேன். எனக்கு விவாகரத்து கிடைத்ததும் என்னுடன் இருப்பது கஷ்டம் என என் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களே நினைக்க ஆரம்பித்தனர். நான் எடுத்த எல்லா முடிவும் தவறு என என் குடும்பத்தார் நினைத்தார்கள். ஒரு வழியாக கடனை அடைத்துவிட்டேன். ஆனால், ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தேன். தூங்க முடியவில்லை. அதனால் எப்பொழுது பார்த்தாலும் வேலை செய்து கொண்டே இருந்தேன். பேசாமல் செத்துப் போயிடலாம் என நினைத்தேன்” என்றார்.

Read More : நிலைகுலைய வைத்த நிலச்சரிவு..!! பலி எண்ணிக்கை 282ஆக உயர்வு..!!

Tags :
Advertisement