For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிஃஎப் பயனாளிகளே..!! உங்களுக்கு அடித்தது செம ஜாக்பாட்..!! பண மழை கொட்டப் போகுது..!!

08:21 AM May 07, 2024 IST | Chella
பிஃஎப் பயனாளிகளே     உங்களுக்கு அடித்தது செம ஜாக்பாட்     பண மழை கொட்டப் போகுது
Advertisement

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஊழியர்கள் மாதந்தோறும் தங்கள் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ஊழியர்கள் பணியின் போதும் இந்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

பலருக்கு EPFO ​​தொடர்பான சில விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தெரியாது. இந்த விதிகளில் ஒன்று தான் லாயல்டி-கம்-லைஃப். இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் ரூ.50,000 வரை இலவசமாக பெறலாம். ஆனால், அதற்கு ஒரு சில நிபந்தனைகள் உள்ளது. அதாவது, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போதும் அதே பிஎஃப் கணக்கில் இருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 ஆண்sடுகள் ஒரே பிஎஃப் கணக்கில் இருந்தால், லாயல்டி-கம்-லைஃப் திட்டத்தின் பலன்களைப் பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

சமீபத்தில் CBDT அவர்களின் EPF கணக்குகளில் 20 வருடங்களாக தொடர்ந்து பங்களிக்கும் வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி-கம்-லைஃப் நன்மையை பரிந்துரைத்துள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, 20 ஆண்டுகளாக ஒரே பிஎஃப் கணக்கை பயன்படுத்தி வருபவர்களுக்கு கூடுதலாக ரூ.50,000 கிடைக்கும். அடிப்படை சம்பளம் ரூ.5,000 உள்ளவர்கள் ரூ.30,000 பயனடைவார்கள். இதேபோல அடிப்படை சம்பளம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்கள் ரூ.40,000 மற்றும் 10,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் ரூ.50,000 பெறுவர்.

Read More : ‘AC-யில் இருப்பவர்கள் தப்பிச்சிட்டீங்க’..!! ’நீங்க அடிக்கடி வெயிலில் சுத்திட்டு இருக்கீங்களா’..? மருத்துவர் எச்சரிக்கை..!!

Advertisement