For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இவ்வளவு அழகான கிராமத்தில் இப்படி ஒரு விசித்திரமா..? அப்படி என்ன இருக்கு தெரியுமா..?

Not wanting to stay in the scenic village, the people are fleeing to other areas. Is it due to ghosts and devils? Let's see in detail.
11:59 AM Aug 12, 2024 IST | Chella
இவ்வளவு அழகான கிராமத்தில் இப்படி ஒரு விசித்திரமா    அப்படி என்ன இருக்கு தெரியுமா
Advertisement

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமத்தில் தங்க விரும்பாமல் அங்குள்ள மக்கள் மற்ற பகுதிகளுக்கு ஓடி விடுகின்றனர். இதற்கு பேய், பிசாசுகள் தான் காரணமா..? விரிவாக பார்க்கலாம்.

Advertisement

தற்போதைய காலகட்டத்தில் அமைதியும், சுகாதார தூய்மையும் உள்ள இடத்தில் வாழவே, அனைவரும் ஆசைப்படுகின்றனர். இயற்கை அழகும் நல்ல காட்சிகளும் இருக்க வேண்டும். இதெல்லாம் இருக்கும் ஒரு கிராமம் இருக்கிறது. அங்கு கடற்கரை, மிக அழகான பள்ளத்தாக்குகள் உள்ளன. ஆனால், இங்கு யாரும் வாழ விரும்பவில்லை. மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி விட்டனர். மக்கள் வெளியேறுவதற்கான காரணம் மிகவும் விசித்திரமானது.

ஒருவேளை அங்கு பேய், பிசாசுகள் இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், காரணம் அதுவல்ல. திருட்டு, கொள்ளை, கொலை போன்ற எந்த குற்றச் சம்பவங்களும் இந்த கிராமத்தில் கிடையாது. போர்ட்லோ என்ற பெயரில் இங்கிலாந்து நாட்டில் இந்த கிராமம் மிகவும் அழகான இடத்தில் உள்ளது. கிராமம் வரை செப்பனிடப்பட்ட சாலைகள் உள்ளதால் போக்குவரத்துக்கு எந்த சிரமமும் இல்லை. இந்த இயற்கை பள்ளத்தாக்கு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.

இங்கிருந்து சூரிய உதயத்தைப் படம் எடுக்க தொலைதூரங்களில் இருந்து புகைப்படக் கலைஞர்கள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் பிடித்தமான இடம். இருப்பினும் மக்கள் இங்கு நிரந்தரமாக தங்க விரும்பவில்லை. காரணம் என்னவென்றால் மற்ற இடங்களை காட்டிலும் இங்கு வாடகை மிகவும் அதிகம். இந்த வீடுகள் யாருடைய பெயரில் உள்ளதோ, அவர்கள் ஏற்கனவே நகரங்களை விட்டு வெளியேறி விட்டனர்.

இந்த வீடுகள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், வாடகை அதிகம் என்பதால் யாரும் அங்கு தங்குவதற்கு தயாராக இல்லை. பெரும்பாலான வீடுகளில் சுற்றுலா பயணிகள் வந்து தங்கி பெரும் தொகையை செலுத்தி செல்கின்றனர். சொல்லப்போனால் இங்கு யாரும் வீடு வாங்க முடியாது. ஏனென்றால் வெறும் 2 படுக்கையறை கொண்ட காட்டேஜின் விலை ரூ.4.5 கோடிக்கு மேல். நீங்கள் 3 படுக்கையறை வீடு வாங்க விரும்பினால், சுமார் 8.5 கோடி ரூபாய் செலவிட வேண்டும். இந்த விலையில், நகரத்தில் மக்களுக்கு ஒரு சூப்பரான வீடு கிடைக்கும். அழகிய கிராமமாக இருந்தாலும் வாடகை அதிகம் என்பதால் இதனை விரும்புவோர் குறைவாகவே உள்ளனர்.

Read More : ரேஷன் அட்டைதாரர்களே சூப்பர் குட் நியூஸ்..!! கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement