For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உஷார்..!! செல்போன் வெடித்து சிதறி சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!! சார்ஜ் போட்டபடி பயன்படுத்தியதால் விபரீதம்..!!

Tragedy happened to the boy when the cell phone exploded
10:24 AM Sep 02, 2024 IST | Chella
உஷார்     செல்போன் வெடித்து சிதறி சிறுவனுக்கு நேர்ந்த சோகம்     சார்ஜ் போட்டபடி பயன்படுத்தியதால் விபரீதம்
Advertisement

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு பகுதியில் ஹர்தியால் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 9 வயதில் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று ஹர்தியால் சிங் தன் மனைவியுடன் வயல்வெளிக்கு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது அவர்களுடைய மகன் மட்டும் வீட்டில் நண்பர்களுடன் இருந்துள்ளார்.

Advertisement

அப்போது, சிறுவன் செல்போனில் கார்ட்டூன் வீடியோ பார்த்துள்ளான். செல்போனில் சார்ஜ் இல்லாததால் சார்ஜ் போட்டபடியே வீடியோ பார்த்துள்ளான். அந்த சமயம், திடீரென செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சிறுவனுக்கு கை, கால், தொடை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், செல்போன் சார்ஜ் போட்டபடி பயன்படுத்துவதால், வெடித்து சிதறுவது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகும் நிலையில், தற்போது சிறுவன் ஒருவன் இதனால் பாதிக்கப்பட்டுள்ளான். எனவே, செல்போனை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்துமாறும், சார்ஜ் போட்டபடி அதனை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read More : விடுதியில் தங்கியிருக்கும் பெண்களே உஷார்..!! ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த இளைஞர்..!! திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

Tags :
Advertisement