For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உஷார்..!! வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள்..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

08:55 AM Mar 22, 2024 IST | 1newsnationuser6
உஷார்     வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள்     தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
Advertisement

வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்படும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை தினமும் தெரிவிக்க வேண்டும் என வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் நாடாளுமன்ற 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில், வங்கி கணக்குகளில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் மற்றும் அதிக தொகைக்கான பரிவர்த்தனைகள் குறித்த தினமும் தகவல் தெரிவிக்க வேண்டும் என வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நிறைவுபெறும் வரை இது நடைமுறையில் இருக்கும் என்பதால் இதற்கான கண்காணிப்பு பணியில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வங்கிகளின் இயக்குனர் வாரிய கூட்டங்களில் இது பற்றி ஆலோசித்து சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More : ”நீங்களாச்சும் தருவீங்கன்னு தானே வந்தேன்”..!! எம்பி சீட் கொடுத்த மறுத்த பாஜக..!! அப்செட்டில் விஜயதரணி..!!

Advertisement