முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இவர்கள் அனைவருக்கும் வங்கி மானியம், இலவச பயண அட்டை... 28-ம் தேதி நடைபெறும் சிறப்பு முகாம்..!

08:00 AM Sep 26, 2024 IST | Vignesh
Advertisement

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், "மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்" ராசிபுரம் வட்டம், வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளி வருகின்ற 28.09.2024 அன்று காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.

Advertisement

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், "மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்" ராசிபுரம் வட்டம், வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளி வருகின்ற 28.09.2024 அன்று காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை குறித்து பரிசோதனை செய்வதற்கு குழந்தைகள் நல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர் எலும்புமுறிவு சிகிச்சை மருத்துவர், மனநல சிகிச்சை மருத்துவர், கண் சிகிச்சை மருத்துவர் மற்றும் செவித்திறன் பரிசோதகர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர்கலந்து கொள்வர்.

மேற்படி சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுதிறனாளிகளுக்கு புதியதாக அடையாள அட்டை வழங்குதல், ஏற்கனவே உள்ள அடையாள அட்டை புதுப்பித்தல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு, ஆதார் அட்டை பதிவு, UDID அட்டை வழங்குதல், புதிய வங்கி கணக்கு தொடங்குதல், ஆகியவை மேற்கொள்ளப்படும். மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடன் மானியம், இலவச பயண அட்டை மற்றும் அனைத்து வகையான உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பம் இ சேவை மையம் மூலம் இணையவழி பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Tags :
Namakkal dttn governmentசென்னைதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article