For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெங்களூர் குண்டு வெடிப்பு...! குற்றவாளிகள் சென்னை லாட்ஜில் தங்கி இருந்ததாக NIA அதிர்ச்சி தகவல்...!

09:35 AM Mar 23, 2024 IST | 1newsnationuser2
பெங்களூர் குண்டு வெடிப்பு     குற்றவாளிகள் சென்னை லாட்ஜில் தங்கி இருந்ததாக nia அதிர்ச்சி தகவல்
Advertisement

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஷிமோகாவை சேர்ந்த முஸாவீர் ஹுசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா இருவரும் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்ததாக NIA தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள Whitefield பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் சமிபத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தென் மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து அந்த மர்ம நபர் குறித்து தகவல் தெரிவித்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் NIA அறிவித்திருந்தது. இந்த வழக்கு NIA தற்போது விசாரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஷிமோகாவை சேர்ந்த முஸாவீர் ஹுசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா இருவரும் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்ததாக NIA தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement