முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கண்களுக்கு கீழ் கருவளையமா.? கவலை வேண்டாம்.! வாழைப்பழ தோல் போதும் கருவளையம் காணாமல் போகும்.!

05:45 AM Dec 13, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கண்கள் உடலின் பிரதான உறுப்புகளில் முக்கியமானது. சிலருக்கு கண்களின் கீழ் மற்றும் கண்களை சுற்றிலும் கருவளையம் தோன்றும். இதனால் கண்கள் பொலிவிழந்து காணப்படும். இந்த கருவளையம் தோன்றுவதற்கு பெரும்பாலான காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிக நேரம் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்படுத்துவதும் போதுமான தூக்கம் இல்லாததும் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. எனினும் மன அழுத்தம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் கண்களில் கருவளையம் தோன்றலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

இந்த கருவளையம் பெரும்பாலும் நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே மறைந்துவிடும். எனினும் சிலருக்கு இது மறையாமல் இருக்கும். இந்த கருவளையத்தை எளிதாக மறையச் செய்வதற்குரிய கை வைத்தியங்களை இந்த பதிவில் பார்ப்போம். கருவளையத்தை எளிதில் போக்குவதற்குரிய வழி பச்சை வாழைப்பழத்தின் தோள்களில் இருக்கிறது. பச்சை வாழைப்பழத்தின் தோலை எடுத்து அதில் சிறிதளவு விளக்கெண்ணெய் தடவி கண்களை சுற்றி தேய்த்து இருவது நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இதனை ஒரு வாரம் தொடர்ச்சியாக செய்து வர கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் மறைந்து கண்கள் அழகாக மாறும்.

மேலும் கருவளையத்தை போக்குவதற்கு உருளைக்கிழங்கு சாறு ஒரு சிறந்த மருந்தாகும். உருளைக்கிழங்கு சாறை ஒரு பஞ்சியில் எடுத்து கண்களை சுற்றி தேய்த்து வர கருவளையம் மறையும். மேலும் எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாறை ஒன்றாக கலந்து கருவளையம் இருக்கும் பகுதிகளில் தேய்த்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். கருவளையத்தை போக்குவதற்கு கிரீன் டீ ஒரு சிறந்த மருந்தாகும். நான்கு ஸ்பூன் கிரீன் டீ எடுத்து அதனை நீரில் ஊற வைத்து டிகாஷன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்த பின்னர் இவற்றில் ஒரு காட்டன் துணியை நனைத்து கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.

Tags :
Banana SkinDark CircleEyes Healthhealth tipsRemedy
Advertisement
Next Article